அதிர்ச்சி வீடியோ... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15 மாடுகள்... தத்தளிக்கும் கிராமங்கள்!

 
பசு மாடு

குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 15 பசு மாடுகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஆறுகளும், ஓடைகளும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியான அந்த வீடியோ காட்சியில், அப்தசாவில் உள்ள சங்கம நதியில் பசு மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது பதைக்க வைக்கிறது. இந்த பெருவெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. துவாரகாவில் கனமழை காரணமாக வீடு விழுந்ததால் பலர் தவித்து வருகின்றனர். 

குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் வான்வழி ஆய்வு நடத்தினார். இது குறித்த ஒரு ட்விட்டர் பதிவில், "ஜாம்நகர் மற்றும் துவாரகா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்காக இரு மாவட்டங்களின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினேன்."


"கனமழையின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web