அதிர்ச்சி வீடியோ... ராட்டினத்தில் சிக்கி தலைமுடி... கதறித் துடித்த இளம்பெண்!!
திருவிழாக்கள் என்றாலே ராட்டினம், ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், கோலங்கள் புதுப்புது உணவு வகைகள் என களைகட்டும் அதிலும் இளசுகளும், குழந்தைகளும் போட்டி போட்டு ராட்டினம் சுற்ற அடம் பிடிக்கும். அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அங்கு ராட்டினம் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. இந்நிலையில் பெண் ஒருவரின் தலைமுடி ராட்டினத்தில் சிக்கிக் கொண்டது.
દ્વારકા.
— Dina Maalai (@DinaMaalai) September 25, 2023
ખંભાળીયામાં શીરેશ્રર મેળામાં ચકડોળમાં મહિલા ના વાળ ફસાયા વિડ્યો થયો વાઈરલ..
મેળામાં ચકડોળ વારા ની જાગરૂકતા થી ચકડોળ ઉભુ રાખી વાળ ની ગૂંચ કાઢી હોવાનું વિડિઓ માં દેખાય રહ્યું છે.. https://t.co/UUP7aTcu2S via @FacebookWatch
வலி தாங்க முடியாமல் அவர் கதறித்துடித்தார். உடனே ராட்டினம் நிறுத்தப்பட்டது. திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள், பெண்ணின் தலைமுடியை ராட்டினத்தில் இருந்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவரது தலைமுடி, மண்டை ஓட்டின் மேல் உள்ள தோல் முற்றிலும் கிழிந்து படுகாயம் ஏற்பட்டது. திருவிழாவிற்கு வந்திருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராட்டினம் சுற்றத் தொடங்கும் முன் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.மேற்குவங்க மாநிலத்தில் நடந்த விபத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது குஜராத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் காயம் அடைந்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணின் தலைமுடிவை வெட்டி, மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...