உத்தரகாண்டில் வெடித்த கலவரம்.. வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவு..!
![உத்தரகாண்ட் வன்முறை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/58f9be963f207a38d03f1bcc97a4acae.jpg)
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் பண்புல்புரா காவல் நிலையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக மதரஸா (இஸ்லாமிய கல்வி சாலை) கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் மதரஸாவை இடித்து அகற்றியுள்ளனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்த கும்பல் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கல் வீச்சு சம்பவத்தில் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர். டிரான்ஸ்பார்மருக்கும் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டால் சுட்டுக்கொல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க