சிக்கிம் அரசியலில் பெரும் பதற்றம்.. காணமல் போன முன்னாள் அமைச்சர் சடலமாக மீட்பு!

 
ஆர்.சி. பவுடியால் 

இமயமலையை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் ஆர்.சி. பவுடியால் (வயது 90). பாக்யோங் மாவட்டத்தின் சோட்டா சிங்டம் நகரில் வசிக்கும் இவர், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், புல்பாரி பகுதியில் உள்ள டீஸ்டா கால்வாயில் அவரது சடலம் மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த கடிகாரம் மற்றும் உடைகள் மூலம் அவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சட்டசபையில் முதல் சபாநாயகராக பணியாற்றிய பெருமைக்குரியவர். பின்னர் மாநில வனத்துறை அமைச்சரானார். சிக்கிம் அரசியலில் ஒரு முக்கிய நபரான அவர் ரைசிங் சன் கட்சியை நிறுவினார். சிக்கிமின் கலாச்சார மற்றும் சமூக செயல்முறைகள் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு உள்ளது.  இந்நிலையில், இவரது மறைவிற்கு சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web