பிரபல ஜவுளிக்கடையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலைகள் திருட்டு!

 
சிசிடிவி

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் திருமண பட்டுச்சேலைகள் விற்பனை செய்யும் பிரபல ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் குடோன் கடையின் அருகே உள்ளது. இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த கிடங்கில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான 26 பட்டுப் புடவை பண்டல்கள் திருடு போயின. இதுகுறித்து கடையின் நிர்வாகம் சார்பில் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபல ஜவுளிக்கடையின் குடோனில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

பட்டுப் புடவைகள்

அப்போது, கிடங்கில் காவலாளியாக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம் (35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

ஜவுளிக்கடையின் குடோன் சாவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமானது. மாயமான சாவியை செக்யூரிட்டி எடுத்து குடோனில் உள்ள விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடியதும் விசாரணயில் தெரியவந்தது. இதைதொடர்ந்து பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டுப்புடவைகளுடன் தலைமறைவாகிவிட்டார் என போலீசார் கூறுகின்றனர். 

சிசிடிவி

வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே கைவரிசை காட்டி தலைமறைவாகிவிட்ட ராம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

 

From around the web