எஸ்.ஜே. சூர்யா பட நடிகைக்கு 40 வயதில் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

 
மீரா சோப்ரா

எஸ்.ஜே. சூர்யா நடித்து, இயக்கிய பி.எஃப் (அன்பே ஆரூயிரே) படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மீரா சோப்ராவுக்க்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அன்பே ஆருயிரே மூலம் அறிமுகமான நடிகை மீரா சோப்ரா, அதன் பின்னர் தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2015லிருந்து பட வாய்ப்புகள் பெரியளவில் இல்லாததால், தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மீரா சோப்ரா

தற்போது 40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ராவிற்கு திருமணம் முடிவாகியுள்ளது. நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என கூறி, பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் நிலையில், 40 வயதில் இந்த திருமண செய்தி உண்மையா? என நடிகை மீரா சோப்ராவிடமே இது குறித்து கேட்கப்பட்ட போது, “ஆம். எனக்கு திருமணம் ஆகப்போகிறது. என் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உண்மை தான். மார்ச் மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கிறது.

மீரா சோப்ரா

ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்து விட்டனர்' என கூறியுள்ளார்.   தனது திருமணம் குறித்து வெளிவந்த செய்தி உண்மை தான் என கூறிய நடிகை மீரா சோப்ரா   இதுவரை தான்   திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என மாப்பிள்ளை குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web