ரேஷன்கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை... !
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 13 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டது. இதன் பேரில் ரேஷன் கடை பணியாளர்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாங்கினர்.
இந்நிலையில், களப்பணியாற்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் கணக்கிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க