ஜனவரி 24, 25ல் பழனிக்கு சிறப்பு ரயில்கள்... தைப்பூசக் கொண்டாட்டம் ஆரம்பம்.. !
தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து முருகன் ஆலயங்களில் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் மிக கோலாகலமாக தைப்பூசம் கொண்டாடப்படும். அந்த வகையில் 3ம் படை வீடான பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து பழனியில் பக்தர்கள் வருகை தரலாம் என்பதால் பக்தர்கள் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் மதுரை - பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் " பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பின் படி மதுரை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பழநி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க