கொடூரம்... இளைஞர்களின் மர்ம உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி தண்டணை...!!

 
மிளகாய் பொடி

உத்தரப்பிரதேச மாநிலம் , நொய்டா   ஜேவார் பகுதியில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த திருட்டில்  ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை கட்டிப்போட்டு என்ன தண்டனை கொடுக்கலாம் என ஆலோசனை  நடைபெற்றது. இதன்படி  அவர்களுக்கு தலிபான் பாணியில் தண்டனை வழங்க கூட்டத்தினரால் முடிவு செய்யப்பட்டது.

மிளகாய் பொடி

பிடிபட்ட  2  இளைஞர்களின் கைகளைக் கட்டி அவர்களின் பேண்டைக் கழற்றச் சொன்னார்கள். அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடியைத் தேய்த்தனர்.  இதனால் 2 இளைஞர்களும் வலியால் அலறித் துடித்தனர். இந்த சமயத்தில் சுற்றியிருந்த கூட்டத்தினர் அவர்களை   அடித்து உதைத்தனர்.

டெல்லி போலீஸ்


கூட்டத்தில் இருந்த சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞர்களை மீட்டனர்.   பாதிக்கப்பட்ட 2 இளைஞர்களும், மனிதாபிமானமற்ற முறையில் தங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர்.   போலீஸார்   இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருட்டு வழக்கில் சந்தேக நபர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  திருடியதாக சந்தேகத்தில் சிக்கிய இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட   சம்பவம் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web