மீண்டும் இலங்கை அராஜகம்... 23 தமிழக மீனவர்கள் கைது... படகுகளையும் பறிமுதல் செய்து அடாவடி!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்துள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் மீனவர் கைதுகள் குறைந்த பாடு இல்லை.

மீனவர்களின் படகுகள்

இந்நிலையில்தான், ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்திய - இலங்கை எல்லைப்பகுதியில் மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இருக்கிறார்கள். இதில் 23 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது இலங்கைக் கடற்படை.

இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர். மீனவர்கள் மீதான கைது மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web