நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை... ட்ரோன்கள் பறக்கத் தடை!

 
ட்ரோன் ஸ்டாலின்
 

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நவம்பர் 9ஆம் தேதி திருச்சி வருகிறார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இரவு சாலை வழியாக திருச்சிக்கு வர உள்ளார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுப்பார்.

ட்ரோன்

அடுத்த நாள் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார். இந்த விழா திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவில் தலைமை தாங்கும் முதலமைச்சர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றவுள்ளார்.

ட்ரோன்

பின்னர் அவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்லத்தின் புதிய செயல்பாடுகளை தொடங்கி வைப்பார். அதன்பின் புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழாவை நடத்த உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!