அசத்தல்... பைக் அதிர்வில் இருந்து மின்சாரம்... பொறியாளர் சாதனை!

 
சிவக்குமார்

காஞ்சிபுரம் அருகே பைக்கை ஸ்டார்ட் செய்து அதில் ஏற்படும் அதிர்வில் மின்சாரம் தயாரித்து மின்சாதனங்களுக்கு பயன்படுத்திய பொறியாளர் பாராட்டுகளை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பல ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த பிறகு, பொதுமக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, தனது பைக்கை ஸ்டார்ட் செய்து அதிர்வுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவியை அதில் பொருத்தி பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பயன்படுத்தினார். இதன் மூலம் தினமும் 6 யூனிட் மின்சாரத்தை சேமித்து மின்சாதனங்களுக்கு பயன்படுத்துகிறார்.

மேலும், அதிர்வு மூலம் கிடைக்கும் மின்சாரத்தை, மொபைல் போன்களை சார்ஜ் செய்யவும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை இயக்கவும், மின் சாதனங்களாக பயன்படுத்தி வருகிறார். பைக் அதிர்வு மூலம் மின்சாரம் தயாரிக்கும் சிவக்குமாரின் புதிய கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web