தெரு நாய்க்கடி வழக்குகள்... 26 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் தெரு நாய்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இணைத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து முன்னதாக, ஆகஸ்ட் 22ம் தேதி உச்சநீதிமன்றம், தெரு நாய் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க தீர்மானித்தது. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மீதமுள்ள 26 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டெல்லி தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
