அதிர்ச்சி... 2 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்!

 
திவ்யான்ஷி

தெருநாய்களின் தொல்லை ஏதோ தமிழகத்திலும், ஆந்திராவிலும் மட்டும் இருப்பதல்ல போல... நாடு முழுவதுமே தெருநாய்களில் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில், தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.புதுடெல்லியின் துக்ளக் லேன் பகுதியில் நேற்று முன் தினம் பிப்ரவரி 24ம் தேதி மாலை தனது வீட்டின் அருகே 2 வயது குழந்தை திவ்யான்ஷி  விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் திடீரென திவ்யான்ஷியைத் தாக்கிக் கடித்து குதற துவங்கியது. 

வெறி நாய்கள்


சுமார் 5 நாய்கள், குழந்தை திவ்யான்ஷியைக் கடித்துக் குதறியபடியே வீட்டின் வாசலில் இருந்து 100 முதல் 150 மீட்டர் வரை குழந்தையை இழுத்துச் சென்றுள்ளன. குழந்தையின் அழுகுரலை கேட்டு வெளியில் வந்த பெற்றோர், தெருநாய்களிடமிருந்து குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று மாலை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மனிதர்களை தெருநாய்கள் கடித்துக் குதறுவது இது முதல் முறை அல்ல என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாய்கள்


சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி கால்நடை மருத்துவர்கள், அங்கிருந்த நாய்களை பரிசோதனை செய்த போது அவற்றுக்கு ரேபிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர். இருந்த போதும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்பி-க்கள் குரல் எழுப்பியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியிலேயே குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web