தமிழகத்தில் அதிர்ச்சி... பெற்றோர் உதவியுடன் 12ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்!

 
பிரகாஷ்

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கல்விக்காக பூத்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.  ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் வீட்டின் அருகே பாட்டி வீடு உள்ளது. இதனால், பாட்டி வீட்டுக்கு சென்றபோது மாணவியுடன் பிரகாஷ்-க்கு பழக்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு அந்த மாணவியிடம் இருந்து செல்போன் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடியை பிரகாஷ் வாங்கியுள்ளார். பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் சாட் மூலம் மாணவியிடம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் காதலாக மாறியதால், மணியவியை தனியாக பைக்கில் அடிக்கடி அழைத்து சென்றார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பெற்றோர் உதவியுடன், கடத்தப்பட்டு, திருப்பூருக்கு மாணவியை கொண்டு சென்றது தெரிய வந்தது. பின் பிரகாஷ் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்நிலையில், மாணவி காணாமல் போன வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் சென்று மாணவியை அழைத்து வந்து பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டின் முன் நேற்று முன்தினம் விட்டு சென்றனர். இதன் பின் பிரகாஷ் தலைமறைவாகினார். அவரை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராதாபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பிரகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழியில் குடும்பம் நடத்தினார். பிரகாஷின் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ், இதுபோல், பல பெண்களை கடத்தி, திருமணம் செய்யாமல், குடும்பம் நடத்தி, சித்ரவதை செய்து, விரட்டியடித்து வந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web