ஓட்டப்பந்தயத்தில் மாணவர் மயங்கி விழுந்து மரணம்!! கதறித் துடித்த பெற்றோர்!!

 
ரிஷிபாலன்

சமீபகாலமாக மிக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்புக்கள் அதிகரித்துவருகின்றன. நடனம் ஆடிக்கொண்டிருந்த போதே மரணம், உடற்பயிற்சி செய்த போது சரிந்து விழுந்து  மரணம்,  நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணம் என மிக இளம் வயதில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவது  பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சரவணன். கூலி தொழிலாளியான இவருக்கு நித்யா என்ற மனைவியும், ரிஷி பாலன்  என்ற மகனும்  உள்ளனர். இவர் செம்பனார்கோவில் தாமரை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

ஓட்டப்பந்தயம்
இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மாணவன் ரிஷி பாலனும் கலந்து கொண்டார். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய மாணவன் ரிஷி பாலன், மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். இதனால் உடனடியாக ரிஷி பாலனை பொறையார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிஷி பாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷி பாலன் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், மாணவன் ரிஷி பாலன் பிற்பகல் 3 மணிக்கு மயங்கி விழுந்ததாகவும், ஆனால் மாணவனை மாலை 6 மணிக்கு தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மாணவன் மயங்கிய சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை  . இந்த சம்பவம் குறித்து பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாய் நித்தியா புகார் அளித்துள்ளார். அதில் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும், மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் காரணம் என்றும், அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

போலீஸ்
மேலும் தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி   ஒருவருக்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்யா நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web