பகீர்... பள்ளிப் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்!!
டெல்லியில் பள்ளிப் பேருந்தில் 6 வயது மாணவி, மாணவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள ரோகினியில் 6 வயது மாணவியை பள்ளிப் பேருந்துக்குள் வைத்து மாணவர் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தாய், சம்பந்தப்பட்ட பள்ளியில் புகார் தெரிவித்தார்.
ஆனால், அந்த புகாரை வாபஸ் பெறுமாறு பள்ளி நிர்வாகம் கூறியது. அத்துடன் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டு காவல் துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் இதற்கு கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் , முதல் தகவல் அறிக்கையின் நகலையும், வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களையும் இணைத்து அனுப்ப காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் பாலியல் புகார் அளிக்கப்பட்டது, குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தியது இதனால் பள்ளியின் தலைவர், பள்ளி மேலாளர், முதல்வர், துணைமுதல்வர் மற்றும் பிற பள்ளி அதிகாரிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன் செப்டம்பர் 5ம் தேதிக்குள் டெல்லி காவல்துறையிடம் இருந்து வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை மகளிர் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாலிவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!