4 வயது மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை.. அதிர்ச்சி பிண்ணனி!!

 
நிதர்சனா

புதுக்கோட்டை மாவட்டம்  கட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர்  முருகன் .   இவரது மகன் பால்ராஜ்.  இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி  பிரியா . இவர்களுக்கு 7 வயதில் ரிஷியும், 4 வயதில்  நிதர்சனாவும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலையில்  அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பால்ராஜ், அவரது 2 குழந்தைகளுடன் கட்டக்குடியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் செல்போனில் பிரியாவை, பால்ராஜ் தொடர்பு கொண்டார். அப்போது குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புகின்றனர்.  அதனால் விராலிமலை முருகன் கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய பிரியா விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார்.

நீச்சல்

பின்னர் மலை அடிவாரத்தில் நின்றிருந்த பால்ராஜிடம், குழந்தைகள் எங்கே என்று பிரியா கேட்டுள்ளார். அதற்கு பால்ராஜ், குழந்தைகள் மலைமீது உள்ளதாக கூறியுள்ளார். 
 இதனை நம்ப மறுத்த அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பிரியாவின் உடலில் ஆங்காங்கே குத்தினார். பிரியா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பால்ராஜை சுற்றி வளைத்து பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர்.  படுகாயம் அடைந்த பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் பால்ராஜ் வெளியே வந்தார்.  

ஆம்புலன்ஸ்

அதிகாலை பால்ராஜ் தனது மகள் நிதர்சனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.  அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.  கட்டக்குடி தர்மகுளம்  குளத்தில் பால்ராஜூம், நிதர்சனாவும் சடலமாக மிதந்தனர்.அங்குள்ள பொதுமக்கள்  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் போலீசார் விரைந்து வந்து குளத்தில் இறங்கி 2 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.  பால்ராஜ் தனது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக  மகள் நிதர்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  அங்கு வந்த பால்ராஜின் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web