அதிர்ச்சி... நடிகை வரலட்சுமி கடத்தல் வழக்கில் நேரில் ஆஜராக சம்மன்... !!
கேரளாவில் விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ கடத்தல் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கின. இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14வது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரனுடனும் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வகையான கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை தான் திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை அறிவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து நடிகை வரலட்சுமியிடம் கேட்கப்பட்ட போது “ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது” என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன என என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களுடன் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் திரைத்துறையில் முதலீடு செய்துள்ளார். எத்தனை பணத்தை சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவல் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!