அசத்தல்... சென்னை ஐஐடிக்கு ரூ110 கோடி நன்கொடை அளித்த சுனில் வாத்வானி...!

 
சுனில் வாத்வானி

ஏஐ தொழில்நுப்ட வளர்ச்சியால் மனிதர்களின் பணி வெகுவாக குறைய இருப்பதாக தகவல் வெளியாகி ஒரு புறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஆராய்ச்சி மருத்துவத்துறைகளில் இதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் பயன்படுத்தி மேலும் வளர்ச்சி அடையலாம்  என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்த ஆராய்ச்சியும் தொடர்ந்து வருகிறது. அந்த வ்காஇயில்  சென்னை ஐஐடியில் முதல்முறையாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி பாட நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக   சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ110 கோடி நன்கொடை  அளித்துலார். இதனால்  இந்த ஆராய்ச்சி பள்ளி  இந்தியாவிலேயே  AI துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என கூறி வருகின்றனர்  ஐஐடி பேராசிரியர்கள். 

சுனில் வாத்வானி
சென்னை ஐஐடியில் 1975ல் படித்தவர்  சுனில் வாத்வானி. இவர் பட்டப்படிப்பை முடித்து  சுகாதாரத் துறையில் முதலீடு செய்து  வாத்வானி என்ற புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கினார்.   கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்கள் அசுர வளர்ச்சியடைந்து  பில்லியன் டாலர் நிறுவனங்களாக உயர்ந்துள்ளன.  இவர்   சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்க உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான ஆராய்ச்சி பள்ளி அமைப்பதற்கு அதிகபட்ச தொகையாக 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல்முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  


இதுகுறித்து  சென்னை ஐஐடி இயக்குனர்  , “புதியதாக தொடங்கப்பட்ட AI மற்றும் Data Science பள்ளியில் AIDA எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவுகள் குறித்த படிப்புகள் கற்றுத்தரப்பட இருக்கிறது.   செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவு முதலிய ஆராய்ச்சி படிப்புகள் உடன் இங்கிலாந்தின் பர்க்ஹிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணை Msc படிப்பு என 15 பேராசிரியர்கள் உடன் இந்த படிப்பு  தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 30 மாணவர்கள்  பயனடையும் வகையில்   ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, நிதி பகுப்பாய்வு, உற்பத்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு கல்வி, உயிரியல் பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.  

ஐஐடி
ஜே.இ.இ மற்றும் ஐஐடி கேட் தேர்வுகள் மூலம் தரவு அறிவியல் அல்லது செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா   நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் பட்டய படிப்பு பெரும் இளம் மாணவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுப்பதாக" தெரிவித்துள்ளார்.  தமிழக  குறித்த பொருளாதார இலக்கை அடைவதற்கு  சென்னை ஐஐடியில் மேற்கொள்ளப்படும் ஏஐ ஆராய்ச்சிகள் பெரும் பாய்ச்சலாக இருக்கலாம் எனத்  தெரிவித்துள்ளனர்.   

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web