செம... உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சர்ப்ரைஸ்... தயாராகும் விமானப்படை...!!
![கிரிக்கெட்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/98ff9827397716f5917537b904bac0e5.png)
நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதனை காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களை உற்சாகமூட்ட கிரிக்கெட் வாரியமும் விமானப்படையும் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் உலகக்கோப்பை இறுதி போட்டி தொடங்கப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் விமான சாகசங்கள் நிகழ்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதன்படி இந்தியா , ஆஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்தியாவுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலியா கேப்டன் அறிவித்துள்ளார். கோப்பையுடன் நாடு திரும்ப ஆஸ்திரேலியா அதன் முழு பலத்தையும் பிரயோகிக்க உள்ளது. சொந்த நாட்டில் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கின்றனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!