டி20 இந்தியா ஆஸ்திரேலியா மோதல்... பழிதீர்க்குமா இந்தியா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... ?
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அந்த சோகம் இன்னும் முழுவதுமாக பல இடங்களில் இன்னும் கரையாத நிலையில் இன்று டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் தோல்வியால் துவண்டு கிடக்கும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்றைய போட்டியில் கில், ராகுல், ஷமி, பும்ரா, ஜடேஜா உட்பட முக்கிய வீரர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க வளரிளம் வீரர்களால் ஆன இந்திய அணி களமிறங்குகிறது.
அதேபோல், ஆஸ்திரேலிய அணியிலும் ஹெட், மேக்ஸ்வெல் என முக்கிய வீரர்களின்றி புதிய அணி களமிறங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி, விசாகபட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி, உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஏக்கமுடன் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!