நோட் பண்ணிக்கோங்க... இன்று முதல் சென்னையில் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

அதன் பிறகு அதிகாலை முதல் காலை 9:20 மணி வரையும், பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 10.20 மணி வரையும் வழக்கம் போல் கால் அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும். மேலும் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது.
அதே நேரம் தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் பகுதியாகவும் சில ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதும், வந்து சேர்வதும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக விழுப்புறம் ரயில் நிலையத்திலேயே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா