நோட் பண்ணிக்கோங்க... இன்று முதல் சென்னையில் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

 
இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
நோட் பண்ணிக்கோங்க.. இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னையில் 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில் தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்
அதன் பிறகு அதிகாலை முதல் காலை 9:20 மணி வரையும், பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 10.20 மணி வரையும் வழக்கம் போல் கால் அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும். மேலும் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது.  

ரயில் எக்ஸ்பிரஸ்

அதே நேரம் தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல ரயில்கள் பகுதியாகவும் சில ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதும், வந்து சேர்வதும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக விழுப்புறம் ரயில் நிலையத்திலேயே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web