டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து ரூ.1லட்சம் ரொக்கம், மதுபாட்டில்கள் கொள்ளை!

 
டாஸ்மாக்

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கத்தையும், மது பாட்டில்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 10 மணியுடன் மதுபான கடைகளை மூடிவிட்டு பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் 2ம் ரயில்வே கேட் அருகே  சத்திரம் தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை வழக்கம் போல் பணி முடித்து நேற்றிரவு கடையை மூடி விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். 

கொள்ளை

இன்று காலை டாஸ்மாக் கடையின் வழியாக சென்ற சிலர், கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸார் பார்த்தபோது, கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளை

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் நடைபெற்று இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் நிகழ்ந்துள்ள இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web