அதிர்ச்சி... இந்திய எல்லையில் பதற்றம்... 6 பேர் பலி!!
மேகாலயா மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்திற்கும் அஸ்ஸாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபாங்கப் கிராமத்தில் இரு தரப்பினரும் வில் அம்புகளை பயன்படுத்தி ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் எந்தவித உயர் சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைராலகி வருகிறது. இரு மாநில எல்லை காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் விரைந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Locals use 🏹 against each other as fresh clashes occurred at a disputed village along the Lapangap village #Assam_Meghalaya border.
— Saba Khan (@ItsKhan_Saba) September 27, 2023
No injuries reported. pic.twitter.com/KZEzy8gteT
மோதல் நடந்த இடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுவதை இரு மாநில காவல்துறையினரும் கண்காணித்து வரும் நிலையில், இன்று காலை நிலைமை அமைதியாக மாறியுள்ளது. சம்பவ நடந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதே போல் ஒரு சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஸ்ஸாம் – மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் முக்ரோவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 5 மேகாலயா உள்ளூர் கிராம வாசிகள் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வனக் காவலர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
இப்படி, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரு மாநில முதல்வர்கள் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக அடுத்த மாத தொடக்கத்தில் சந்திப்பை நடத்த உள்ளனர். கடந்த ஆண்டு, அஸ்ஸாம் – மேகாலயா இடையே வேறுபாடு உள்ள கிராமங்களில் 6 பிரிவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...