ஐபோன் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!!

 
தீவிபத்து

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டியில் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கும்,  போலீசாருக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது.   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்புதுறையினர்   தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீவிபத்து


இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.   அவசர உதவிக்கு இரண்டு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருந்தனர். தீவிபத்து காரணமாக வெளியில் இருந்து தொழிற்சாலைக்குள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை

ஆம்புலன்ஸ்

அதே போல் உள்ள பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையும் வெளியேவிடவில்லை. தொடர்ந்து   6 மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்.மகேந்திராசிட்டி பகுதியில் ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web