சென்னையில் தங்கி கோகைன் விற்பனை.. ரகசியமாக செயல்பட்டு வந்த இரு நைஜீரியர்கள் கைது..!
கோகைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோகைன் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ஒரு கிலோ கோகைனை பறிமுதல் செய்து, அதை விற்பனை செய்த நைஜீரிய இளைஞரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கோகோயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த மற்றொரு நைஜீரிய இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் நைஜீரியாவை சேர்ந்த சினேடு ஓனோச்சி மற்றும் அமேஜியோன் இனாலெக்வு (39) என்பது தெரியவந்தது. இருவரும் பெங்களூரில் இருந்து கோகோயின் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் கிராம் கணக்கில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!