கல்குவாரியில் காதலியை தள்ளி கொலை செய்த காதலன்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

 
நிவேதா

வேலூர் அரியூரை சேர்ந்த சரவணனின் மகள் நிவேதா (18). இவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்து வந்தார்.கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், மறுநாள் வேலூர் புதுவசூரில் உள்ள கல்குவாரி ஒன்றில் நிவேதா பிணமாக சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசாரால் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கல்குவாரி

விசாரணையில் வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவரும் (26), நிவேதாவும் காதலித்து வந்ததாகவும், வேறு சமூகத்தை சேர்ந்த நிவேதா திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி வற்புறுத்தியதால் சம்பவத்தன்று பிரகாஷ் ஆட்டோவில் அழைத்து சென்று கல்குவாரியின் உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததும் தெரிந்தது. மேலும்,இந்த கொலையை மறைக்க பிரகாசின் நண்பர் மூலக்கொல்லையை சேர்ந்த நவீன்குமார் (23) உதவி செய்ததும் தெரியவந்தது. பின்னர் பிரகாஷ் மற்றும் நவீன்குமாரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்த வழக்கின் விசாரணை வேலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.,எஸ்.டி.) சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சியங்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறுகட்ட விசாரணைகளுக்கு பிறகு நேற்று (08.12.2023) இறுதி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, இளம்பெண் நிவேதாவை திட்டமிட்டு கொலை செய்த பிரகாசிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், நவீன்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web