காதலியை கொலை செய்து கிணற்றில் வீசிய காதலன்!!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இருவாணி வயல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விநோதினி . இவர் இன்ஸ்டாகிராம் மூலம் மனோரஞ்சித்துடன் காதல் ஏற்பட்டது. பின்னர் அவரது பேரை கையில் பச்சை குத்தும் அளவிற்கு தீவிர காதலாக மாறியுள்ளது. மேலும் அவ்வப்போது மனோரஞ்சித்தை சந்திக்க தென்காசிக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தெரிந்துக்கொண்ட மனோரஞ்சித் காதலியை மறக்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றி உள்ளனர்.
அதன் பின்னரும் தொடர்ந்து வினோதினியை மனோரஞ்சித்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விநோதினி தன் கணவரை விட்டுவிட்டு காதலனை தேடி கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் காதலனுடன் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது.
ஏற்கனவே விநோதினி வேறு ஒருவரை திருமணம் செய்த ஆத்திரத்தில் இருந்த மனோரஞ்சித், விநோதினி இன்ஸ்டாகிராமில் வேறு சில இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களின் உதவியுடன் காதலியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். பின்னர் விநோதினியின் உடலை சாக்கு முட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.
விநோதினியின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனோரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களான மகா பிரபு, பரத், மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொலையில் சம்மந்தப்பட்ட 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!