கணவன் கண்ணெதிரே புதுமணப்பெண் மரணம்... சம்பவ இடத்திலேயே பலியான சோகம்....!

 
மணப்பெண்

இருசக்கர வாகனத்தின் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியதில் கூடுவாஞ்சேரி அருகே கணவன் கண்முன்பாகவே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (24). இவருக்கும் சந்தியாவுக்கும்( 20) திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், சென்னை, மாதவரத்தில் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில், நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு, இவர்கள் இருவரும், ஹரிதாஸ் தந்தையுமாக 3 பேரும் சேர்ந்து ஒரு ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில், மாதவரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு சென்றிருந்தனர். தைப்பூச விழாவை முடித்து விட்டு, நேற்று மூவரும் அதே இருசக்கர வாகனத்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இவர்களின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் மூவரும் சாலையில் விழுந்தனர்.

விபத்து


அப்போது, பின்னால் வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து, சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சந்தியா பரிதாபமாக பலியானார். 
ஹரிதாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யனாரப்பனுக்கு காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்
கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலன் விசாரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிதாஸ், அய்யனாரப்பன் ஆகியோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web