வீடு புகுந்து பாஜக நிர்வாகி அவரது மனைவி வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
வீட்டில் நுழைந்து பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பிப்லோடா கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராம்நிவாஸ் கும்வாத். இவரது மனைவி முனிபாய். ராம்நிவாஸ், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்நிவாஸ் தனது மனைவியுடன் பிப்லோடா கிராமத்தில் வசித்து வந்தார், அவரது மகன்கள் வெளியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு ராம்நிவாஸ் மற்றும் அவரது மனைவி முனிபாய் தூங்கிக் கொண்டிருந்தபோது, அத்துமீறி கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ராம்நிவாஸ் மற்றும் அவரது மனைவி முனிபாய் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இன்று காலை இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சியின் போது இந்த இரட்டை கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த இரட்டைக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க