அதிர்ச்சி.. கர்ப்பிணி மனைவியை தீவைத்து எரித்த கொடூரம்!!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் . இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்து வரும் நிலையில் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார்.
இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு முற்றியது. இனி மேல் நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மனைவி மிரட்டல் விடுத்தார்.
புல் மப்பில் இருந்த கணவர் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டார்.
அத்துடன் மகனை தூக்கி சென்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...