வீடியோ... டயர் வெடித்து புளியமரத்தில் மோதிய பேருந்து!! 32 பேர் படுகாயம்.. அலறித்துடித்த பயணிகள்!!
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று ஒகேனக்கல் வரை சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்ததால் பாரம் தாங்காமல் இண்டூர் அருகே செல்லும்போது முன் டயர் வெடித்தது. இதனையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
தனியார் பேருந்து புளியமரத்தில் மோதி 32 பேர் படுகாயம்!! pic.twitter.com/ZacMJeSZ3e
— Dina Maalai (@DinaMaalai) September 21, 2023
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் வீரமணி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தவர்களை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து புளிய மரத்தில் மோதியதில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. எதிரில் மற்ற வாகனங்கல் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குறிப்பாக தர்மபுரியில் இருந்து ஒகேனக்கலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இரு வழிச்சாலையை விரிவு படுத்தி 4 வழி சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...