அதிர்ச்சி.. பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து... 24 பேர் பலி.. 35 பேர் கவலைக்கிடம்!! வீடியோ..!!
தென் அமெரிக்க நாடான பெருவில் அயகுச்சோவா பகுதியில் அமைந்துள்ள மலையில் கொண்டை ஊசி வளைவுகள் அதிகம். இந்த மலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு கொண்டை ஊசி வளைவில் பேருந்தை திருப்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து பேருந்து மலைப்பாதையில் உருண்டு கோர விபத்து ஏற்பட்டது. பல அடி உயரத்தில் இருந்து பேருந்து உருண்டு கீழே விழுந்தது.
#LOÚLTIMO Bus interprovincial de ruta Huancayo - Ayacucho de la empresa Molina Unión sufrió despiste y volcadura cayendo al Río Mantaro. Medios locales informan de más de 20 personas fallecidas.
— Roger García (@RogerAderly) September 18, 2023
- Video: Rodito Audaz pic.twitter.com/VoTrPajys0
இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கைமேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
படுகாயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்துதீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரு நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...