பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்த 10 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
சாத்தூர் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். மேலும், பட்டாசு ஆலை விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் பட்டாசு ஆலை வெடித்த இடத்திற்கு விரைந்தன.

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் உயிரிழப்பு |  Virudhunagar Accident: 9 dead, 8 injured - hindutamil.in

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெடிவிபத்தினால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அறையில் வெடிபொருட்கள் கலக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக  இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

இந்த நிலையில்,  விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

 

From around the web