பணியின் போது சுருண்டு விழுந்து சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்.. அதிர்ச்சியில் சக வீரர்கள்..!

 
 ராஜட் கட்டோச்

பணியில் இருந்தபோது மாரடைப்பால் சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக பணியாற்றி வருபவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ராஜட் கட்டோச் (29). அவர் ஒரு உடற்பயிற்சி ஆலோசகரும் கூட. இவருக்கும் சீமாதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

லஞ்ச வழக்கில் சிஆர்பிஎஃப் டி.ஐ.ஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ  நீதிமன்றம் அதிரடி! | In the bribery case, three persons including CRPF DIG  were imprisoned - Vikatan

தற்போது இவர் தனது குடும்பத்துடன் சிஆர்பிஎஃப் வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆன்ஜியோகிராம் சிகிச்சையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை 4-வது ஆண்டாக முதலிடம்  | stanley hospital - hindutamil.in

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ராஜட் கட்டோச் உடலை கைப்பற்றிய ஆவடி டாங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web