மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்... தொடரும் இலங்கையின் அட்டூழியம்!

 
மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் ரோந்து சென்ற போது காங்கேசன் கடலோர பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளும், 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ​​20 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். படகு ஓட்டுனர்கள் இருவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் மேலும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் அரசுக்கு 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கை விவகாரத்தில் பூரண தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web