8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவருக்கும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கல்யாண உறவில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்ட ஆரோக்கிய ஷர்மிளா தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய ஷர்மிளா கள்ளக்குறிச்சியில் உள்ள அம்மா வீடான ராயபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். சிறிது காலம் அங்கையே தங்கியுள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு சண்டையாக முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கிய ஷர்மிளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, அம்மா வீட்டில் யாரும் இல்லாத வேளையில், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் தகவல் அறிந்து இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுக் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க