ஆசையாசையாய் கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர்... மேலே ஆசிட் ஊற்றி அதிர வைத்த கடைக்காரர்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கொம்புகாரனேந்தலைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டனிடம் கருங்கல் மாலை தயாரிக்க ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்காக கருங்கல் மாலை வாங்க விஜயகுமார் நேற்று தனது நண்பர் சதீஷ்குமாருடன் மானாமதுரை சென்றார். மாலை தருவது தொடர்பாக விஜய மார்த்தாண்டனிடம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகைக்கடை உரிமையாளர் விஜய் மார்த்தாண்டன், கடையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை தூக்கி எறிந்தார். இதில் சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்தார்.
இதனால் கடையில் இருந்து அலறியடித்து ஓடிய சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் விஜய மார்த்தாண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கருங்காலி மாலை வாங்கச் சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!