6-ஆம் வாய்ப்பாட்டை சரியாக சொல்லாத மாணவி.. ஆத்திரத்தில் சிறுமியின் காதை அடித்து கிழித்த ஆசிரியை..!

 
மாணவி

கணக்கு வாய்ப்பாடு சரியாக சொல்லாத சிறுமியின் காதை ஆசிரியை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த மீனவர் ஒருவரின் 9 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வகுப்பு முடிந்து அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த தாய், சிறுமியிடம், 'ஏன் அழுகிறாய்?' என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி, வகுப்பில் 6வது வாய்ப்பாடு சரியாக சொல்லாததால் கணக்கு ஆசிரியர் அடித்து காதை கிழித்தார். பின் அவரே காயத்திற்கு மருந்து போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார் என்றும் சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

Kalkulam, Kanniyakumari : கல்குளம்: குளச்சல் அருகே பெரியான்விளையில் திருமண  ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை | Public App

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web