ஓசியில் சாப்பாடு சாப்பிட்டு, ஹோட்டல் ஓனரையே பணம் கேட்டு மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்..!
உணவக உரிமையாளரை பணம் கேட்டு காவலர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் காவலர் ஒருவர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “காரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறேன்.தினமும் 5 பேருடன் வந்த சுபீன் என்ற காவலர் ரூ.2000க்கு மேல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் விட்டுவிட்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்.
ஏற்கனவே பணம் கொடுத்த போது மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். சாராயம் விற்றதாக பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன். மேலும், எனக்கு ஏதாவது நேர்ந்தால், அது காவலர் சுபீனின் தவறு” என்று உணவக உரிமையாளர் கூறியிருந்தார்.
இதையடுத்து, பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் சுபினை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உத்தரவிட்டதுடன், உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க