அச்சுறுத்தும் நிஃபா வைரஸ்....!! பள்ளிகள் மூடல்!!

 
நிஃபா வைரஸ்


தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில்  நிபா வைரஸ் பரவல் தீவிரமெடுத்துள்ளது. கோழிக்கோட்டில்  ஆகஸ்ட் 30ல் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அதேபோல் 10 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இவரது மனைவி மற்றும்  2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை, சுகாதார துறைக்கு தகவல் அளித்தது. இந்நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.   இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

நிஃபா வைரஸ்

இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு்ள்ளனர்.  இந்நிலையில் கேரளா மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில்  பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில்  தமிழக சுகாதாரத் துறை   கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.  இங்கு கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.  வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு   சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உள்ளதா? இல்லையா? என்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

அடினோ வைரஸ்

இதே போல கோவையின் கேரள மாநில எல்லைப் பகுதிகளான வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உட்பட  11 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சளி காய்ச்சல்  தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மாநில எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும் டூவீலர், கார்  போன்ற வாகனங்களில் வருபவர்களின் முகவரி, செல்போன் எண் இவைகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  இது குறித்து  கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள்   “தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. நிபா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை எனினும்  தமிழ்நாடு - கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. நிபா வைரஸ் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  ” என தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web