காணாமல் போன இளம்பெண்... 7 வருடங்களாக தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை!

 
இளம்பெண் கடத்தல்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 7 ஆண்டுகள் கழித்து, காணாமல் போன இளம்பெண், மோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், இங்ஸ்டர் பகுதியில் எவர் க்ரீன் மோட்டல் செயல்பட்டு வருகிறது.  மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் இருந்து இந்த மோட்டல் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மோட்டலின் அறையிலிருந்து திடீரென இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, போலீசார் உடனடியாக மோட்டலின் அறைக்குள் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்தனர்.

அந்த அறையில் சேரில் அமர்ந்திருந்த நிலையில், இளம்பெண்ணின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவரருகே, துப்பாக்கி, போதை பொருட்கள், பல செல்போன்கள் சிதறிக் கிடந்துள்ளன. உடனடியாக இளம்பெண்ணை மீட்ட போலீசார், அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தற்போது கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா

7 ஆண்டுகளுக்கு முன், 2017-ம் ஆண்டில் அந்த இளம்பெண் காணாமல் போய் விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 30 வயது நெருங்கிய அவரை போலீசார் மீட்டுள்ளனர். அவருடைய குடும்பத்தினரும் தகவல் அறிந்து வந்து இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர்.

இதுகுறித்து மிச்சிகன் மாகாண போலீஸ் அதிகாரியான லெப்டினன்ட் மைக் ஷா கூறுகையில், ஒரு பெண் அழுவது போன்ற அலறல் சத்தம் கேட்டது. அதனால், குறிப்பிட்ட பகுதிக்கு நாங்கள் சென்றோம். மோட்டலின் கதவு பூட்டியிருந்தது. அதனை உடைத்து, உள்ளே சென்றோம் என கூறினார்.

அந்த பெண்ணின் அடையாளம் குறித்த பிற விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். அதிகாரி மைக் ஷா தொடர்ந்து, அந்த பெண்ணிடம் குற்ற சம்பவம் எதுவும் நடந்து உள்ளதா? என நாங்கள் விசாரிப்போம். மனித கடத்தல், வன்முறையான சூழல் அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நடந்து இருக்கிறதா? என்றும் விசாரிக்கப்படும் என்றார்.

அமெரிக்கா போலீசார்

அவரை யாரேனும் கடத்தி சென்றிருப்பார்கள் என நான் கூற விரும்பவில்லை.  ஏனெனில், ஏதோ ஓர் உறவாக தொடங்கி, பின்னர் அவருடைய விருப்பத்திற்கு எதிராக கொண்டு செல்லப்பட்டு, அவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்க கூடும் என கூறியுள்ளார்.  அந்த அறையில், அவர் அடைத்து வைக்கப்பட காரணம் என்ன? யாரேனும் அவரை கடத்தி சென்றனரா? அல்லது விருப்பத்தின் பேரில் அவர்களுடன் அவர் சென்றாரா? ஆகியவை பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web