கொடூரம்.... மனைவி, மகள் முன்னே ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்... !!

 
சரவணன்

சென்னை மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் பகுதியில் வசித்து வருபவர்  பிரபல ரவுடி கேங்கு சரவணன் . இவரை  கிழங்கு சரவணன்  என அழைக்கின்றனர். 41 வயதான இவர்  "ஏ" கேட்டகிரி ரவுடியான சரவணன் மீது கொலை, கொள்ளை உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவர் ஆகஸ்ட் 19ம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான். இதனையடுத்து  ரவுடி சரவணன்  மனைவி செல்வி, மகள் பரமேஸ்வரி உடன் வானகரம் சக்தி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு  மனைவி, மகள் மற்றும் அக்கா மகன் கேசவன் ஆகியோருடன் ஆட்டோவில் மதுரவாயலில் உள்ள டிபன் கடையில் சாப்பிட சென்றார்.  

அடித்தே கொலை
அனைவரும் டிபன் சாப்பிட்டு விட்டு ஆட்டோவில் வானகரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது  மதுரவாயல் கன்னி அம்மன் கோவில் அருகே வரும் போது பின்னர் 4 இருசக்கர வாகனத்தில் அவர்களை   தொடர்ந்து வந்த  கும்பல்  ஆட்டோவை வழிமறித்து ரவுடி கிழங்கு சரவணனை மனைவி, மகள் கண்ணெதிரே கத்தியால் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர். இதில் ரவுடி கிழங்கு சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது மனைவி அளித்த தகவலின் பேரில்  ரவுடி சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணி கொலை


இந்த கொலை குறித்து  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் புதூர் ரவுடி அப்பு என்பவருக்கு ரவுடி கிழங்கு சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் காரணமாக ரவுடி அப்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி கிழங்கு சரவணனை கொலை செய்தது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து  தனிப்படை அமைத்து ரவுடி அப்பு உட்பட 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web