பகீர்... இருமகன்களை எரித்து தானும் தற்கொலை செய்த தாய்!!

 
ஷீபா

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வடக்கநாடு புத்தன்வீட்டு விளையில் வசித்து வருபவர் ஏசுதாஸ். இவர்  கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ஷீபா. இவர்களுக்கு  கெவின்  , கிஷான்  என இரு மகன்கள்.  இருவரும் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.  இவர்கள் இருவருக்கும்  கால்களில் பக்கவாத நோய் ஏற்பட்டது.   பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் சரியாகவில்லை.  ஷீபாவுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில்  கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.  இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தீ வைத்து கொலை

இதனையடுத்து   ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த ஷீபா தனது 2 மகன்களுடன் வீட்டின் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஷீபாவின் வீட்டில் இருந்து கரும்புகை வந்து  கொண்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உடனே  விரைந்து சென்று வீட்டின் கதவை தட்டி அழைத்தனர். ஆனால், கதவு வெகுநேரமாக திறக்கப்படவே இல்லை. மாறாக அலறல் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
ஏதோ விபரீதம் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  அதே நேரத்தில்   வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர் . படுக்கை அறையில் இருந்து புகை வந்ததால் அந்த கதவையும் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷீபாவும், அவருடைய மகன்களும் படுக்கையில் தீயில் கருகிக் கொண்டிருந்தனர்.  உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை  மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே இளைய மகன் கிஷான் பரிதாபமாக உயிரிழந்தான்.  ஷீபா மற்றும் மூத்த மகன் கெவின்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும்  சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஷீபாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்

 இந்த விசாரணையில், மகன்களுக்கு நோய் இருந்ததால் ஷீபா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தாகவும், அவர்களின் சிகிச்சை குறித்து  கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இதனால் தான் கணவர் வீட்டை விட்டு சென்றதும் தெரிய வந்தது.இதனால்  தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த ஷீபா,  மகன்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்துக் கொலை செய்து  விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.   குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்துவிட்டு  தாயும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web