நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்வீச்சு... கட்சியினருக்கு மண்டை உடைப்பு!

 
ஜெகதீஷ் சந்தர்

நாம் தமிழர் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெகதீஷ் சந்தரை வேட்பாளராக அறிவித்து திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில், வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தண்டவாளம் அருகே இருந்து மர்ம நபர்கள் இருவர் திடீரென கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுபீஸ் மற்றும் பொதுமக்கள் கல்லால் தலையில் அடிபட்டு காயம் அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தையல் போடப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆவடி நகர் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முன்னதாக கல்வீசிய நபரை துரத்திய போது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

 

From around the web