தங்கை மரணத்திற்கு பழிக்கு பழி.. இளைஞரை கொலை செய்த அண்ணன் கைது..!
![குணால்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/0ac5ac36b68f06a5cbb9dced081ad749.jpg)
கொடைக்கானலில் தங்கையின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை கொலை செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலைகிராமத்தை சேர்ந்தவர் குணால். பைனான்ஸியராக இருக்கும் இவரை அதே கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வி காதலித்து வந்துள்ளார்.
ஆனால் குணால் தாமரை செல்வியின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த தாமரை செல்வி கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் இறந்த துக்கத்தில் தாய் தந்தை இருவரும் இறந்துள்ளனர். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணம் குணால் என்று எண்ணிய தாமரை செல்வியின் அண்ணன் தர்ம மந்திரி குணாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அண்ணன் தர்ம மந்திரி நண்பர் காளியுடன் இணைந்து குணாலை கொலை செய்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குணாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த தர்ம மந்திரி, காளி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க