வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி.. பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் அதிரடியாக கைது..!!
வேலை வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட பொதுச்செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பாஜகவின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் சிலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், பணிக்காக வெளிநாடு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
இதையடுத்து வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ராஜேந்திரன் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைவராக இருந்த பாஸ்கர் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரி தேர்வு எழுதியிருந்தது சர்ச்சையான நிலையில் தற்போது மாவட்ட செயலாளரும் மோசடி வழக்கில் சிக்கியது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!