ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டு கொலை செய்த காவலர்... மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

 
சேத்தன் சிங்

ஜூலை 2023ல் ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் சேத்தன் சின்ஹ் சவுத்ரி திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்  ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் டிக்கா ராம் மீனா மற்றும் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  சேத்தன் சின்ஹ் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.  ரயில்வே பாதுகாப்பு காவலருக்கும், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டதாக ரயில் பயணிகள் கூறியுள்ளனர்.  

சேத்தன் சிங்

உயிரிழந்த மற்ற 3 பேரும் முஸ்லிம்கள். அவர்களது மதம் சார்ந்து இழிவாக பேசி அவர்கள் மூவரையும் சேத்தன் குமார் சவுத்ரி சுட்டதாக வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது.   அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் வெளியாகின.  ஆனால், சேத்தன் சின்ஹ் சவுத்ரியின் மனநிலை நன்றாக இருந்துள்ளது எனவும், சம்பவத்தன்று என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்துள்ளார் என  ரயில்வே போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சேத்தன் சிங்
இது குறித்து  சேத்தன் சின்ஹ் சவுத்ரி  2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார். இதற்காக அவருடைய ஜாமீன் மனுவை புறக்கணிக்க கூடாது என மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே போலீசார்  சேத்தன் சின்ஹ் சவுத்ரி   குறிப்பிட்ட சமூகத்தின் மீது அவர் கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்ததாக கூறியுள்ளனர்.  தன் கணவர் மீதான வகுப்புவாத கோணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவறானவை. அவரது கடந்த  காலங்களில் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றதால் கணவரின்   மனதில் பயம் இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web