போப் ஆண்டவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 86 வயது போப் பிரான்சிஸ் தற்போது செயல்பட்டு வருகிறார். வாடிகனில் வசித்து போப் பிரான்சிஸ், வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 2021ல் போப் பிரான்ஸிஸுற்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அப்போது பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், சிறிது காலம் ஓய்வு எடுத்து கொண்ட நிலையில், தனது பணியை தொடங்கி செய்து வந்தார்.
VATICAN CITY—@HolySeePress has released the following on the details of Pope Francis’ surgery, and his current status:#PrayForPopeFrancis pic.twitter.com/MZZWRwXf5v
— Bree A Dail (@breeadail) June 7, 2023
இந்நிலையில், சுவாச பிரச்சனைகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப், நான்கு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், டிஸ்சார்ஜ் ஆனார்.
தற்போது ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவமனையில் நேற்று போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். ஜெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறிது கால ஓய்வுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹோலி சீ பிரஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போப் ஆண்டவருக்கு குடல் சார்ந்த அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான். வயிற்று பகுதியில் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியமானதாக இருந்தது. சிறிது கால ஓய்வுக்கு பிறகு போப் பிரான்சிஸ் வழக்கமான பணிக்கு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ